ஆப்நகரம்

கரை ஓரத்தில் ஆளில்லாத படகுக்குள் 500 கிலோ கடல் அட்டைகள் செத்துபோன நிலையில் மண்டபத்தில் மீட்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றில் 500 கிலோ கடல் அட்டை பறிமுத்ல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Oct 2021, 9:16 pm
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற் பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகில் வனத்துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினரால் 500 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil கரை ஓரத்தில் ஆளில்லாத படகுக்குள் 500 கிலோ கடல் அட்டைகள் செத்துபோன நிலையில் மண்டபத்தில் மீட்பு!


ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனசரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் மகேந்திரன் ஆகியோர் மற்றும் இந்திய கடலோர காவல்படை கமாண்டன்டர் ஷனோவாஸ், துணை கமாண்டர் மாருதி ஆகியோர் தலைமையில கடற் பரப்பில் கூட்டு ரோந்து மேற்கொண்டனர்.

கூட்டு ரோந்து மேற்கொண்டபோது, பாக் விரிகுடாவின் வடக்கு கடல் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனையிட்டபோது, அட்டவணை I, பகுதி IV C யை சட்ட விரோதமாக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை எல்லையில் மீன் பிடித்ததாக 3 மீனவர்களை சிறைப்பிடித்த இந்திய கடற்படை..!
படகில் கடல் அட்டைகள் சுமார் 500 கிலோ இறந்த நிலையில் இருந்தது. மேலும் நிறுத்தப்பட்டிருந்த படகில் பதிவு எண் என்பதே இல்லாமல் இருந்தது. இதையடுத்து குறிப்பிட்ட படகும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகு கைப்பற்றி கரைக்குக் கொண்டு வரப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை நடந்து வருகிறது. குறிப்பாக ஆளில்லா படகு யாருடையது, கடல் அட்டைகள் கடத்தியது யார் என்பது தொடர்பாக கடற் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி