ஆப்நகரம்

கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்: ராமநாதபுரத்தில் பகீர் சம்பவம்!

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய துணை தலைவரை பெண் ஊராட்சி தலைவரின் கணவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.

Curated bySrini Vasan | Samayam Tamil 17 May 2022, 9:12 pm
ராமநாதபுரம் மாவட்ட திருப்புல்லாணி ஒன்றியம், மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவராக சரஸ்வதி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதியின் கணவர் பாக்கியநாதன் தலையீடு அதிகமாக உள்ளதாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியருக்கும் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக திருப்புல்லானி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
Samayam Tamil கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்


மாயாகுளம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் ஊராட்சி தலைவர் சரஸ்வதி கணவர் பாக்கியநாதன் தலையீடு அதிகமாக உள்ளதாக வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இனிமேல் பாக்கியநாதன் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிடக் கூடாது மீறி தலையிட்டால் அவர்மீதும், ஊராட்சி மன்ற தலைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம் அனுப்பப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் தன்னைக் கேட்காமல் எந்த ஒரு பணிகளையும் செய்யக்கூடாது என மீண்டும் பாக்கியநாதன் மிரட்டுவதாகவும், இதுகுறித்து தட்டிக்கேட்ட எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனக்கு பாதுகாப்பு வழங்கும்படியும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தலையிட்ட ஊராட்சி மன்ற தலைவர் கணவர் பாக்கியநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாயாகுளம் 14-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் சிவலிங்கம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால்குமாவத் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கார்த்திக் ஆகியோரிடம் புகார் மனு மற்றும் பாக்கியநாதன் கொலை மிரட்டல் விடுத்த போன் ஆடியோ பதிவையும் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி