ஆப்நகரம்

ராமநாதபுரம் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு: வாக்குவாதத்தில் இறங்கிய வாகன ஓட்டிகள்!

சாயல்குடி பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் டீசல் இருப்பு இல்லை என கூறுவதால் வாகன ஓட்டிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated bySrini Vasan | Samayam Tamil 14 Jun 2022, 10:10 pm

ஹைலைட்ஸ்:

  • சாயல்குடி பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் இருப்பு இல்லை
  • 10 நாட்களுக்கும் மேலாக குறைந்த அளவிலான பெட்ரோல் டீசல் வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள்
  • பங்கு ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் அனைவரும் அன்றாடத் தேவைகளுக்கு இங்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி செல்லும் சுற்றுலாப் பயணிகள் இவ்வழியே பயணிப்பதால் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் இருப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாயல்குடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள ஏராளமான பெட்ரோல், டீசல் பங்குகளில் இன்று காலை முதல் பெட்ரோல், டீசல் இருப்பு இல்லாததால் பங்கு ஊழியர்கள் சுற்றுலா மற்றும் இருசக்கர வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்த வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதுகுறித்து பெட்ரோல் பங்க் டீலர் சிங்கை ஜின்னா கூறுகையில்: "கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு குறைந்த அளவிலான பெட்ரோல், டீசல் வழங்குவதாகவும் அதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது தங்கள் நிறுவனத்திற்கு ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாகவும், ஆகையால் தாங்கள் பெட்ரோல் பங்குகளை திறந்து வைப்பதும் மூடுவதும் தங்கள் விருப்பம் என அலட்சியமாக பதில் அளிப்பதாக குற்றம் சுமத்தினார்.

எனவே மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி சீரான பெட்ரோல், டீசல் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி