ஆப்நகரம்

ராமநாதபுரத்தில் பிடிபட்ட மிக முக்கிய கடத்தல் கும்பல்..! சிங்கம் பட ஸ்டைலில் சம்பவம்...

ராமநாதபுரம் அருகே நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல். போதை பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் கைது.

Samayam Tamil 22 May 2020, 12:07 pm
ராமநாதபுரம் அருகே திருவாடானை கடற்கரைப்பகுதியில் இருந்து நாட்டுபடகில் இலங்கைக்கு போதைப்பொருள்கள் கடத்த உள்ளதாக காவல்துறைக் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil ராமநாதபுரத்தில் பிடிபட்ட மிக முக்கிய கடத்தல் கும்பல்


அதனையடுத்து அங்குச் சென்ற சிறப்பு பிரிவு போலீசார் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள்களான மெத்தோக்குலான், ஆம்ப்பிட்டமெயின், பெத்தாமெட்டயின் மற்றும் செம்மரக்கட்டைகள், மொபைல் போன்கள்,எடை பார்க்கும் மிசின் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் சர்வதேச மதிப்பு சுமார் 5 முதல் ஏழு கோடி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியா முழுவதிலும் உள்ள போதைபொருள்கள் கடத்தல் நெட்வொர்க் குழுவினர் குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளதால் சிறப்பு படை அமைத்து ,அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணம் செல்போன்கள் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே இதுவரை நடந்த கடத்தல் தடுப்பு சம்பவங்களில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

விருதுநகரில் வேறொருவர் மனைவியுடன் ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்பட்ட பழக்கம்..!

இந்த கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய, அப்துல் ரஹிம், அபுல்கலாம் ஆசாத், அருள்தாஸ், சுரேஸ்குமார், அஜ்மல் கான், அஜ்மீர்கான், முத்துராஜா, கேசவன், அப்துல் வஹாப் உள்ளிட்ட 9 கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவங்களில் தொடர்புடைய வட மாநிலங்களைச் சேர்ந்த குற்றவாளிகளை மற்றும் முக்கிய குற்றவாளியை தீவிரமாக தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி