ஆப்நகரம்

நேதாஜி நண்பர் முத்துராமலிங்கர் பிறப்பு இறப்பு ஒரே தேதியில்: முழு விவரம் உள்ளே!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூசை விழா, மற்றும் ஜெயந்தி விழா பூசைகள் யாகசாலையுடன் துவங்கியது.

Samayam Tamil 28 Oct 2021, 4:43 pm
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் ஆலயத்தில் பிள்ளையாா் பட்டி குருக்கள்களின் யாகசாலை பூசைகளுடன் முத்துராமலிங்கத்தேவரின் 59 ஆவது குருபூசை விழா மற்றும் 114 ஜெயந்தி விழா இன்று ஆன்மீக விழாவுடன் இன்று காலை துவங்கியது.
Samayam Tamil நேதாஜி நண்பர் முத்துராமலிங்கர் பிறப்பு இறப்பு ஒரே தேதியில்: முழு விவரம் உள்ளே!


கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் உக்கிரபாண்டிய-இந்துராணி அம்மாள் தம்பதிக்கு 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்கர். சாதிய அடையாளத்தோடு இவர் முத்துராமலிங்கத் தேவர் என பிரமபலமாக அறியப்படுகிறார். இவர் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி 1963 ஆம் ஆண்டு உயிரிழந்தார். பிறந்த தினத்திலே முத்துராமலிங்கர் உயிரிழந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்துராமலிங்கர் “தேசியம் எனது உயிர், தெய்வீகம் எனது உடல், வீரமற்ற வீவேகம் கோழைத்தனம், விவேக மற்ற வீரம் முரட்டுத்தனம் சூதகமானால் கங்கையில் நீராடலாம், கங்கையே சூதகமானால் எங்கே நீராடுவது” எனக் கூறிய வசனங்கள் இன்றளவும் பெரும்பாலான மக்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது.

ஐயோ, கவுன்சிலர்களையே தரையில் படுத்து உருள விட்ட ரூ ஒரு கோடியே 45 லட்சம் டெண்டர்: ராமநாதபுர சம்பவம்..!
தனது பெற்றோர் ஆசையை ஏற்காத முத்துராமலிங்கர் திருமணம் செய்வதை தவிர்த்து வந்தார். தனது இறுதி மூச்சு வரை தேசியம் என்றே வாழ்ந்து இறந்தார். இதற்காகவே அவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் அவர் தேசியம் காக்க தனது நெருங்கிய நண்பர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சுடன் இணைந்து நமது நாட்டின் சுதந்திர விடுதலை போராட்டத்திற்காக பல்வேறு போராட்டங்களை தமிழ்நாட்டில் முன்னெடுத்தார். இந்த போராட்டங்கள் காரணமாக அவர் வெளியில் இருந்த காலத்தை விட சிறையில் அடைக்கப்பட்ட காலங்களே அதிகம் என செய்திகள் கூறுகின்றன.

அடுத்த செய்தி