ஆப்நகரம்

தடுப்பூசி போடலைனா அனுமதி சீட்டே கிடையாது: ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!

ராமநாதபுரத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்க முடியாது என அதிரடி உத்தரவு ஒன்று அமல் படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Jan 2022, 4:52 pm
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட மீனவர்கள் செல்லும் விசைபடகிற்கு மட்டுமே மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும், மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Samayam Tamil தடுப்பூசி போடலைனா அனுமதி சீட்டே கிடையாது: ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் அனைத்து மீனவர்களும் இனி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் எனவும், அதனை உறுதிப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
இதையடுத்து மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தி, மீன்வளத்துறை அலுவலகத்தில் அதற்கான சான்றினை சமர்ப்பித்த பின்னரே விசைப்படகிற்குமீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி