ஆப்நகரம்

பல லட்சம் மோசடி: களஞ்சியம் வட்டார குழு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மோசடியில் ஈடுபட்டு உள்ள நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி ஹலோ கந்தசாமி தனது மனைவி மற்றும் மற்ற மகளிர் சுயஉதவி குழுகளில் உள்ள பெண்களுடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Curated bySrini Vasan | Samayam Tamil 21 Jun 2022, 11:53 am
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே களஞ்சியம் என்ற தனியார் அமைப்பு மூலம் 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil மோசடி புகார்


பெருநாழி கிராமத்தில் ஏழு மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களின் பெயரிலும் ஐந்து லட்ச ரூபாய் வரை தனியார் வங்கி மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு வங்கியில் 5 லட்ச ரூபாய் கடனை வாங்கி ஒவ்வொரு குழுக்களுக்கும் இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்ததாகவும் கொடுக்கப்பட்ட அந்த பணத்திற்கு களஞ்சியம் தனியார் நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனை களஞ்சியம் தனியார் நிறுவனத்திடம் முழுமையாக செலுத்தி விட்டதாகவும் தற்போது வங்கி மூலம் தங்களது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெற்ற கடனை வட்டியும் முதலுமாக செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் மூலம் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த கமுதி அருகே பெருநாழி கிராமத்தில் களஞ்சியம் நிறுவனம் மூலம் செயல்பட்டு வந்த மகளிர் சுய உதவி குழுக்கள் தாங்கள் வாங்கிய கடன் தொகையை முழுமையாக கட்டிய பின்னர் தற்போது மீண்டும் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்.

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
இந்த நிலையில் நடிகர் ஹலோ கந்தசாமி மனைவி சந்தானமேரி ஒரு மகளிர் சுய உதவி குழுவை அமைத்து கடன் தொகை வாங்கியதை முழுமையாக கட்டிய பின்னரும் மீண்டும் கடன் தொகையை வட்டியுடன் கட்ட நோட்டீஸ் வந்ததை அடுத்து களஞ்சியம் தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி ஹலோ கந்தசாமி தனது மனைவி மற்றும் மற்ற மகளிர் சுயஉதவி குழுகளில் உள்ள பெண்களுடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் கொடுக்க வந்தார்.

மேலும் இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து வருவதால் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ஹலோ கந்தசாமி மற்றும் மகளிர் சுயஉதவி குழு பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி