ஆப்நகரம்

பாம்பனில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தல்... போலிசார் பறிமுதல்

குந்துகால் பகுதியில் புதிய நாட்டுப்படகுத்துறைமுகம் அமைக்கப்பட்டதற்குப் பிறகு, இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Samayam Tamil 21 Oct 2020, 10:06 am
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ மஞ்சளை பாம்பன் கடலில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Samayam Tamil kunthukaal harbour


ராமேசுவரம் அருகே பாம்பன் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தல் நடைபெற உள்ளதாக சுங்கத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமேசுவரம் சுங்கத் துறையினர் பாம்பன் குந்துகால் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு நடுக்கடலில் சந்தேகத்துக்குரிய வகையில் நாட்டுப் படகுகள் திரிந்தன, அவறறைக் கவனித்தபோது, அதில் சில மூட்டைகளைக் கண்ட சுங்கத் துறையினர் சுற்றி வளைத்தனர். அதில் 10 சாக்கு மூட்டைகள் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது அதில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள் இருந்தது. இதை இலங்கைக்கு கடத்துவதற்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து படகில் இருந்த வேதாளையைச் சேர்ந்த படகு உரிமையாளர் மலைராஜ், மாரிச்சாமி, ராஜா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் நாட்டுப் படகு, 500 கிலோ மஞ்சள் ஆகியவற்றை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோயம்பேட்டை போல சென்னைக்கு வரவிருக்கும் இன்னொரு பேருந்து முனையம்!

குந்துகால் பகுதியில் புதிய நாட்டுப்படகுத் துறைமுகம் அமைக்கப்பட்டதற்குப் பிறகு, இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், முறையான மீன்பிடியைக் கூட ஒழுங்காக செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது என்று அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி