ஆப்நகரம்

மகாளய அமாவாசை... எப்படி இருக்கப்போகிறது ராமேஸ்வரம்?

இராமேஸ்வரத்தில் ஆண்டுதோறும் மகாளய அமாவாசையின்போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் பலமாக செய்யப்படும்.

Samayam Tamil 16 Sep 2020, 9:07 pm
இராமேஸ்வரத்தில் இந்த ஆண்டு மகாளய அமாவசைக்கான ஏற்பாடுகள் ஏதும் சிறப்பாக செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது இராமேஸ்வரம் தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாளை மகாளய அமாவசையும் வருவதால், இராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் இணையும். இதன் விளைவாக கொரோனா பாதிப்பு பரவலுக்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டு.
Samayam Tamil rameswaram temple


இந்நிலையில், வழக்கமான ஊரடங்கு காலத்தைப் போலவே பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்கானிக்கப்படுகின்றன என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்த செய்தி