ஆப்நகரம்

ராமநாதபுரம்: பைக் திருட்டில் ஈடுபடும் பரபரப்பு சிசிடிவி காட்சி... துணிகர திருடர்கள் வலைவீச்சு...

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 25 Apr 2023, 11:06 am

ஹைலைட்ஸ்:

  • தொடர் பைக் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்கள்
  • சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ramanathapuram bike theft
ramanathapuram bike theft
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ மார்த்தாண்டம். இவர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளை அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
தொடர் இருசக்கர வாகனம் திருட்டு

இதேபோல் சலவை தொழிலாளர் தெருவை சேர்ந்த மாதவன் தனது மோட்டார் பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அதையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இருவரும் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் இளைஞர் கைது
இந்நிலையில், தற்போது அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த காட்சியில், நைசாக அந்த பகுதிக்கு வரும் ஆசாமிகள் மோட்டார் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து முதுகுளத்தூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருடர்களால் பொதுமக்கள் அச்சம்

இதற்கிடையே, இந்த பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாசலில் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் எப்போது திருடப்படும் என்ற அச்சத்திலேயே இருப்பதாக அவர் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே தினந்தோறும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து சென்று பைக் திருட்டை தடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்கள் தலையில் துண்டு போட்டு முகத்தை மறைத்து இருப்பதால் அவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் விரைவில் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி