ஆப்நகரம்

பரமகுடியில் பாரம்பரிய சிலம்பாட்டம்: ஒரே நேரத்தில் 6,500 பேர்... உலக சாதனை முயற்சி...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 14 Apr 2023, 6:04 pm
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக சிலம்பாட்டம் பார்க்கப்படுகிறது. நவீனமயமாக்கலால் தற்போது கிராமப்புறங்களை தவிர மற்ற இடங்களில் சிலம்பம் பயிற்சி நடைபெறுவதை காண்பதே அரிதாகி விட்டது.
Samayam Tamil silambattam
silambattam


பாரம்பரிய சிலம்பாட்ட போட்டி

இந்நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மூலம் சிலம்பாட்ட போட்டி நடத்தப்பட்டது. உலக சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்த சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் இருந்து 6,500 சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரதி சிலம்பம் பயிற்சி பள்ளி மூலமாக 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக 20 நிமிடம் 23 நொடிகள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

சாதனை படைத்த சிலம்பம்

இந்த சாதனையானது யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட் மூலமாக கண்காணிக்கப்பட்டு சாதனையில் ஈடுபட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தற்போது, சிலம்பாட்டம் கற்றுக் கொள்வது இளைஞர்கள் மத்தியில் மிகவும் அருகி வருகிறது. இந்நிலையில், பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை இளைஞர்கள் கற்றுக்கொள்ள தமிழ்நாடு அரசு ஊக்குவிக்குமாறு போட்டியில் கலந்துகொண்ட சிலம்பம் பயிற்சியாளர் கூறியுள்ளார். சிறு வயதில் இருந்தே அந்த பயிற்சியை வழங்கினால் தான், ஆர்வமுடன் சிலம்பத்தை கற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி