ஆப்நகரம்

விதிகளை மீறி கட்டண வசூல்... பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

விதிமுறைகளை மீறிய பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதுடன் அப்பள்ளிகளின் தாளாளர்கள் அடுத்து 14/10/2020 அன்று நடைபெற உள்ள விசாரணையின் போது ஆஜாராகவும் உத்தரவிட்டுள்ளனர்.

Samayam Tamil 23 Sep 2020, 10:52 pm
பெற்றோர்களிடம் பள்ளிக்கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையை மீறி கட்டண வசூல் செய்ததாக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு பள்ளிகள் உட்பட 9பள்ளிகள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madurai-high-court


கொரோனா காலத்தில் பெற்றோர்களை கட்டணம் செலுத்த வற்புறுத்தக்கூடாது என்றும், இதற்காக மாணவர்களிடம் பாரபட்சம் காட்டக்கூடாது என்று அரசு சுற்றறிக்கையுடன் சேர்த்து அரசாணையும் பிறப்பித்துள்ளது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள் கட்டணம் வாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் ஊதியம் என்னும் நிதித் தேவையைக் காரணம் காட்டி இந்த கட்டண பிடுங்கலை நியாயப்படுத்துகின்றன பள்ளிகள்.

இந்நிலையில் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி The Tamil Nadu Nursery Primary Matriculation Higher Secondary Schools Association, மாநில செயலாரான திரு கே.ஆர்.நந்தகுமார் என்பவர் சார்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று இது தொடர்பாக க 17/07/2020 அன்று அரசாணை அடிப்படையில் நீதிமன்ற ஆணையை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கிய நீதி அமர்வு, விதிமுறைகளை மீறிய பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதுடன் அப்பள்ளிகளின் தாளாளர்கள் அடுத்து 14/10/2020 அன்று நடைபெற உள்ள விசாரணையின் போது ஆஜாராகவும் உத்தரவிட்டுள்ளனர்.

பெற்றோர்களிடம் கட்டணம் வாங்கும் விவகாரத்தில் அறமற்று நடக்கும் பள்ளிகள் அனைத்துக்கும் பொதுவான தீர்ப்பாக இந்த வரும்பட்சத்தில், கொரோனாவுக்குப் பிறகான பள்ளிக்கல்வியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமையவும் வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி