ஆப்நகரம்

ஒற்றை செங்கல் மூலம் வந்தது ஆட்சி; உதயநிதிக்கு இப்படியொரு பாராட்டு?

ஒற்றை செங்கல் மூலம் திமுக ஆட்சி எப்படி மலர்ந்தது? என்பதை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் ஒருவர் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார்.

Samayam Tamil 27 Nov 2021, 10:38 pm
ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள திருஉத்திரகோசமங்கை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராஹி அம்மன் ஆலயத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
Samayam Tamil உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்


இதனை தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திமுகவினர் இளைஞர் அணியினர் ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து உச்சிப்புளி பகுதியை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் விஸ்வநாதன் என்பவர் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு..வேஸ்ட்; பட்டையை கிளப்பும் பாஜ எம்எல்ஏ!

உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடம் இயல்பாக பழக கூடியவர். பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செய்தவர். ஒற்றை செங்கல் மூலம் வாக்காளர் இடம் பல்வேறு கட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி திமுக ஆட்சிக்கு வருவதற்கு பெரும் துணையாக நின்றவர்.

நடிகர் சூர்யா மீதான வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அவரின் பிறந்த நாள் விழாவை பிளாஸ்டிக் பேனர்கள் இல்லாமல் பட்டாசுகள் இல்லாமல் எளிமையான முறையில் ஆலயங்களில் அன்ன தானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றோம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி