ராமநாதபுரம் அருகே ஆறாம் வகுப்பு பள்ளி மாணவன் கேரளா மாணவனின் சாதனையை முறியடித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இம்பாலா சுல்தான். இவருடைய மகன் இன்சாப் முகமது. ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் சிறுவயதில் இருந்தே நீச்சல் மீது ஆர்வம் கொண்டவர். அதனை நீருபிக்கும் விதமாக தண்ணீரில் அதிக நேரம் மிதக்கும் யோகாவை யாருடைய துணையும் இன்றி தானாகவே பயிற்சி எடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய புதிய நீச்சல் யோகா சாதனையை செய்து காட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அனுப்பியுள்ளார் மாணவன் இன்சாப் முகமது. இதில் இவர் ஒரு மணி நேரம் 15 நிமிடம் 14 வினாடிகள் யோக நிலையில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் கேரளாவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் செய்த சாதனையை முறியடித்துள்ளார். இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் இன்சாப் முகமதுவை நேரடியாக அழைத்து இளம் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டியுள்ளார். மேலும் மாணவரின் சாதனையை பாராட்டும் வகையில் அவருக்கு கபீர் சக்ரா விருதுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த மாணவனின் சாதனையை 18 நாடுகளைச் சேர்ந்த ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இது குறித்து மாணவன் கூறுகையில் எனக்கு எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதே லட்சியம் என தெரிவித்தார். சாதனை புரிய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார். இவருடைய சாதனையை கேட்டு பள்ளி ஆசிரியர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும், நண்பர்களும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தன்னுடைய புதிய நீச்சல் யோகா சாதனையை செய்து காட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அனுப்பியுள்ளார் மாணவன் இன்சாப் முகமது. இதில் இவர் ஒரு மணி நேரம் 15 நிமிடம் 14 வினாடிகள் யோக நிலையில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் கேரளாவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் செய்த சாதனையை முறியடித்துள்ளார். இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் இன்சாப் முகமதுவை நேரடியாக அழைத்து இளம் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டியுள்ளார். மேலும் மாணவரின் சாதனையை பாராட்டும் வகையில் அவருக்கு கபீர் சக்ரா விருதுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த மாணவனின் சாதனையை 18 நாடுகளைச் சேர்ந்த ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இது குறித்து மாணவன் கூறுகையில் எனக்கு எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதே லட்சியம் என தெரிவித்தார். சாதனை புரிய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார். இவருடைய சாதனையை கேட்டு பள்ளி ஆசிரியர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும், நண்பர்களும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.