ஆப்நகரம்

டிக் டாக் அழகிகளை வைத்து செக்ஸ் படம்: பட வாய்ப்புக்காக ராமேஸ்வரத்தில் படுக்கையை விரித்த பெண்கள்?

ராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதிக்கு டிக்டாக் பிரபலங்களை அழைத்து வந்து ஆபாசமாக படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த நபர் கைது, நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை.

Samayam Tamil 13 Oct 2021, 6:52 pm
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் வெளியூர்களிலிருந்து பெண்கள் மற்றும் டிக் டாக் பிரபலங்களை அழைத்து வந்து கோவில், கடற்கரை, தனுஷ்கோடி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிவதாக புதுரோடு பகுதியைச் சேர்ந்த மீனவர் கார்த்திக்ராஜா என்பவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
Samayam Tamil டிக் டாக் அழகிகளை வைத்து செக்ஸ் படம்: பட வாய்ப்புக்காக ராமேஸ்வரத்தில் படுக்கையை விரித்த பெண்கள்!


இதையடுத்து காவல் துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டனர். தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த நபரை பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். அதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் ராஜா என்கின்ற சக்தி என தெரியவந்துள்ளது.

இவர் முகநூல், சமூக வலை தளங்களான டிக் டாக் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யும் பிரபலமான பெண்களை நோட்டமிட்டு அவர்களுடைய அலைபேசி எண்ணை வைத்து, அவர்களைத் தொடர்புகொண்டு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

ஏற்றுமதிக்கு தயாராகும் பனைப் பொருட்கள் ராமநாதபுரத்தில் அசத்தும் நபார்டு வங்கி நிகழ்வு!
இப்படி இந்த இம்மானுவேல் ராஜா 30க்கும் மேற்பட்ட பெண்களை இராமேஸ்வரம் அழைத்து வந்து தனியார் தங்கும் விடுதியில் தங்க வைத்து அவர்களை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்ததாகவும், அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்ததாகவும் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இமானுவேல் என்ற சக்தியை ராமேஸ்வரம் நகர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் மற்றும் உயர் ரக செல்போன்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றப்பட்டது.

மேலும் அவரது அலைபேசியில் ஏராளமான ஆபாச புகைப்படங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது காவல் துறையினர் உண்மை நிலவரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி