ஆப்நகரம்

ஊசி போட்டால்தான் அரசு அலுவலகம், வங்கி உள்ளிட்ட இடங்களில் அனுமதி!

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின் பேரில் சுகாதாரத் துறையின் சார்பில் அரசு அலுவலங்களுக்கு கடிதம் கொடுத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Samayam Tamil 30 Nov 2021, 10:48 pm
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் அறிவுறுத்தலின்படி கொரோனா ஒழிப்பு தீவிர நடவடிக்கையின் பேரில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட துணை இயக்குனர் குமரகுருபரனின் அறிவுறுத்தலை தொடர்ந்து, (30-11-2021) மண்டபம் வட்டாரம் உச்சிப்புளியில் சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் தலைமையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil ஊசி போட்டால்தான் அரசு அலுவலகம், வங்கி உள்ளிட்ட இடங்களில் அனுமதி!


அதன்படி, பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்களை நுழைய அனுமதிக்கக் கூடாது என அறிவித்து, அனைத்து வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், அஞ்சல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உத்தரவு போட வேண்டும்.

இதை அடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த உத்தரவை தெரியப்படுத்த அறிக்கையாக ஒட்ட வேண்டும்.

அடுத்த அதிர்ச்சி ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் கொடூர மழை!
இதுத் தொடர்பாக அறிக்கை மூலமாக, கடிதம் மூலமாக அனைத்து கடைகள் திருமண மண்டபங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் பொது சுகாதார எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் பார்வைக்காக அலுவலங்களில் இந்த அறிவிப்பை அதிகாரிகள் ஒட்டி வைத்து உள்ளனர்.

அடுத்த செய்தி