ஆப்நகரம்

இம்மானுவேல் சேகரன் குருபூஜை: அஞ்சலி செலுத்த விதிமுறைகள் என்னென்ன?

பொது இடங்களில் படங்கள் உருவங்களை வைத்து வழிபட அனுமதி இல்லை. அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது.

Samayam Tamil 11 Sep 2020, 2:51 pm
இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழா ஆண்டுதோறும் இராமநாதபுரம் மாவட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனாப் பரவலை தடுக்கும் விதமாக கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையில் மக்கள் யாரும் போய் அஞ்சலி செலுத்த முடியாது. அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி இல்லை. மேலும் என்னென்ன விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்க்கலாம்.
Samayam Tamil immanuel sekaran


இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் இருக்கக்கூடிய நிலையிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக தலா 5 நபர்களுக்கு மட்டுமே மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

பொது இடங்களில் படங்கள் உருவங்களை வைத்து வழிபட அனுமதி இல்லை. அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது.

அஞ்சலி செலுத்த மாட்டு வண்டி, தொடர் ஊர்வலம், ஜோதி எடுத்தல் போன்ற நடைமுறைகளுக்கு அனுமதி கிடையாது.

மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே அஞ்சலி செலுத்த வரவேண்டும், மாற்று வழித்தடங்களில் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதி கிடையாது.

அஞ்சலி செலுத்த வரும் வாகனங்களில் ஆயுதங்கள் எடுத்துவர அனுமதி கிடையாது.

அரசு கல்லூரிகளில் சேர வேண்டுமா? அடிச்சுது ஜாக்பாட் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மேலும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றியே அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இதற்காக காவல் துறையின் சார்பாக பாதுகாப்பு பணிக்காக 4,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏடிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், ராமநாதபுரம் DIG மயில்வாகணன் மற்றும் எஸ்.பி. கார்த்திக் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி