ஆப்நகரம்

பாம்பண் பாலத்திலிருந்து குதித்த 65 வயது மூதாட்டி: பின்னணி என்ன மெரைன் போலீஸ் விசாரணை!

பாம்பன் பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி சக மீனவர்கள் உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நவம்பர் 9 ஆம் தேதி அனுப்பி வைத்தனர்.

Samayam Tamil 9 Nov 2021, 11:06 pm
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இன்று மதியம் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாம்பன் சாலை பாலத்திலிருந்து தற்கொலை முயற்சியில் பாலத்தில் இருந்து குதித்து உள்ளார்.
Samayam Tamil பாம்பண் பாலத்திலிருந்து குதித்த 65 வயது மூதாட்டி: பின்னணி என்ன மெரைன் போலீஸ் விசாரணை!


பலத்த காற்று காரணமாக படகுகளை பராமரித்துக் கொண்டு வேலை செய்து கொண்டு இருந்த சக மீனவர்கள் பெண் ஒருவர் கடலில் குதிப்பதை க் கண்டு படகுகளை எடுத்துக் கொண்டு அவரை தண்ணீரில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி செய்தனர்.

பெண் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் குறித்து மண்டபம் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ராமேஸ்வரத்திற்கு அடுத்த ஆபத்தா...? அமைச்சர் ஆய்வால் கலகத்தில் அதிகாரிகள்!
மருத்துவமனையில் நினைவு தெரிந்த பின்பு பெண் தெரிவித்தபோது மண்டபம் பகுதியைச் சேர்ந்த தங்கம்மாள் வயது 60 குடும்ப பிரச்சினை காரணமாக தண்ணீரில் குதித்ததாக கூறி உள்ளார். அந்த பெண் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மெரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி