ஆப்நகரம்

ஃபேஸ்புக் தோழனை பார்க்கச் சென்ற பெண், மருத்துவமனையில் பிணமாக மீட்பு!

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் மன நல ஆலோசனை பெற்றுவந்த பெண் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறையினர் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை.

Samayam Tamil 19 Oct 2021, 3:02 pm
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவு அருகே உள்ள ஒருங்கிணைந்த சேவை மைய காப்பகத்தில் தங்கி இருந்து மனநல ஆலோசனை பெற்று வந்தவர் தூத்துக்குடி மாவட்டம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ரெங்கன் மனைவி ஐஸ்வர்யா.
Samayam Tamil ஃபேஸ்புக் தோழனை பார்க்கச் சென்ற பெண், மருத்துவமனையில் பிணமாக மீட்பு!


இவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை கழிப்பறையில் தன்னுடைய சுடிதார் துப்பட்டாவை வைத்து தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே உயிரிழந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் தூத்துக்குடியில் வசித்து வந்த ஐஸ்வர்யா முகநூல் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதி கிராம பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விஜய்க்கு திருமணம் ஆகாத நிலையில், ஐஸ்வர்யா தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் சென்று விஜய் என்பவரை சந்தித்து வந்துள்ளார். இது குறித்து விஜய் ஐஸ்வர்யாவின் கணவரான ரெங்கனுக்கும், காவல் துறைக்கும் தகவல் அளித்துள்ளார்.

தகவலையடுத்து ஐஸ்வர்யாவின் கணவரான ரெங்கன் ராமநாதபுரம் சென்று காவல்துறை மூலம் நேற்று அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வந்துள்ளது.

மீண்டும் பச்சை நிறத்தில் மாறிய பாம்பம் கடல்: அடுத்து என்ன ஆபத்து?
காவல்துறையினர் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் ஐஸ்வர்யாவை அவரது கணவர் ரெங்கன் தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்வதாக புறப்பட்டுள்ளார். ஆனால் பதிலாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஐஸ்வர்யா தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அங்குள்ள கழிவறையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் அளித்த தகவலையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் எதற்காக மனநல காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், தூத்துக்குடிக்கு ஏன் அழைத்துச் செல்லப்படவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி