ஆப்நகரம்

கணவன் -மனைவி சண்டை: பறிப்போன மூதாட்டி உயிர்!!

குடும்ப தகராறு காரணமாக 70 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 May 2020, 1:10 am
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த பி.கீரந்தை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (30 ). கூலித்தொழிலாளியான இவர், மனைவி சந்தியாவை பார்ப்பதற்காக கோகொண்டான் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
Samayam Tamil youth


அப்போது குடும்ப பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. கோகொண்டான் கிராமத்தை சேர்ந்த காளியம்மாள் (70) என்ற மூதாட்டியின் பேத்தியும், தமது மனைவியுமான சந்தியாவை அவருடைய கணவர் கார்த்திக் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

கணவன் -மனைவிக்கு இடையேயான சண்டையை விலக்குவதற்காக மூதாட்டி முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், அருகிலிருந்த கட்டையை எடுத்து தலையில் தாக்கியதில் மூதாட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

வந்தாச்சு வந்தாச்சு வைரஸு: வைரலாகும் ஆசிரியரின் பாடல்!

இதனை பார்த்த கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இக்கொலை குறித்து சந்தியா கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திக்கை இளஞ்செம்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி