ஆப்நகரம்

140க்கும் மேற்பட்டோர் கைது... ரவுடிகளிடம் அதிரடி காட்டும் சேலம் ஆணையர்

யாருக்கேனும் ரவுடிகளால் அச்சுறுத்தல், மிரட்டல் ஏதேனும் இருப்பின் 100, 94981 00945 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

Samayam Tamil 7 Dec 2020, 9:25 am
சேலம் மாவட்டத்தில் அதிரடியாக சுமார் 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏன்?
Samayam Tamil salem police commissioner


அண்மைக்காலமாகவேஎ சேலம் மாவட்டம் முழுவதும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வந்தன. அதேபோல பான், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையும் அதிகரித்து வந்தது. இந்த வியாபாரிகள் கல்லூரி மாணவர்களையும், ஏழை எளிய இளைஞர்களையும் குறிவைப்பதால், இளைஞர்களின் எதிர்காலம் பாழாவதோடு, குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. இந்நிலையில், அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் சேலம் காவல் ஆணையாளர் செந்தில்குமார்.

இந்த அறிவிப்பையடுத்து, நேற்று முன்தினம் மாநகர போலீஸார், மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் திடீர் சோதனை நடத்தினர். இதில், டவுன் பகுதியில் கார்த்தி, செவ்வாய்பேட்டை மகேந்திரன், பிரபு, ஜெகநாதன், தாதகாப்பட்டி டெனியா, ஜெகன், சூரமங்கலம் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட 11 ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், 4 தலைமறைவு குற்றவாளிகள், 10 பிடியாணை குற்றவாளிகள், 24 குட்கா விற்பனையாளர்கள் உள்ளிட்ட 142 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உயிரிழந்த காவலர்... 24 லட்சம் நிதி திரட்டித்தந்த சக காவலர்கள்

இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ சேலம் மாநகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாருக்கேனும் ரவுடிகளால் அச்சுறுத்தல், மிரட்டல் ஏதேனும் இருப்பின், தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையம் அல்லது மாநகர காவல் அலுவலகத்தை நேரில் அல்லது 100, 94981 00945 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி