ஆப்நகரம்

கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்து கொலை செய்த கணவர்; சேலத்தில் நடந்தது என்ன?

சேலத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் மனைவியை வரதட்சணை கொடுமை காரணமாக கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 13 Jun 2022, 11:18 am
சேலம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ்( வயது 31) மற்றும் தனஸ்ரீயா (வயது 26) ஆகியோருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமண நாளான்று மணக்கோலத்தில் இருவரும் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.
Samayam Tamil Salem wife murder


திருமணம் ஆன பிறகு சுமார் ஓராண்டு காலம் மகிழ்ச்சியாக சென்ற குடும்ப வாழ்க்கையில், ஓராண்டுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்துவேறுபட்டால் சிறு சிறு சண்டைகள் வந்ததாக கூறப்படுகிறது. அப்படி கடந்த வாரமும் பிரச்சனை ஏற்படவே மனைவி தனஸ்ரீயாவை கீர்த்திராஜ் தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தனஸ்ரீயா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து சமாதானம் செய்த கீர்த்திரான் மனைவியை வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

இந்நிலையில், உங்கள் மகள் உயிரை மாய்த்துக்கொண்டதாக தனஸ்ரீயாவின் பெற்றோருக்கு கீர்த்திராஜ் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேரில் சென்று பார்த்தபோது, தனஸ்ரீயாவின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்துள்ளன.
திருமாவளவனை சீண்டிய வி.பி.துரைசாமி… பொங்கி எழுந்த விசிக தொண்டர்கள்!

இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனஸ்ரீயாவுக்கு குழந்தை இல்லாதது, அதோடு வரதட்சணை கேட்டு கீர்த்திராஜ் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார். அப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த அவர், கிரிக்கெட் மட்டையால் தனஸ்ரீயாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில், உயிரிழந்த தனஸ்ரீயாவை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. திருமணமான 3 ஆண்டுகளில் மனைவியை கிரிக்கெட் விளையாடும் மட்டையால் அடித்து கொலை செய்த கணவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி