ஆப்நகரம்

சேலம்: 9ஆம் வகுப்பு மாணவி மாயம்... ஏற்றிச் சென்ற ஆட்டோவுக்கு வலைவீச்சு ?

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பள்ளி மாணவி மாயமானதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 11 Feb 2021, 5:09 pm
Samayam Tamil kidnap file pic

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவரது மகள் தாரிகா தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென வீட்டில் இருந்து வெளியே சென்ற தாரிகை வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை.

இதனையடுத்து சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் .

சசிகலாவை வரவேற்க இவ்வளவு செலவா? - அமைச்சர் சொல்றதை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

இந்த நிலையில் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை பகுதியில் மாணவி ஆட்டோவில் ஏறி செல்வதை காவல்துறை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆட்டோ எண்ணை வைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.

Adani port: 11 ஆண்டுகளாக ஏமாற்றும் அதானி குழுமம்...போராட்டத்தில் குதித்த மக்கள்

இந்நிலையில் காணாமல் போன மாணவி வீடு திரும்பியதாக மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி