ஆப்நகரம்

இரண்டு வாய்களுடன் பிறந்துள்ள அதிசய ஆட்டுக்குட்டி... பொதுமக்கள் வியப்பு!

இரண்டு வாய், இரண்டு நாக்குடன் பிறந்துள்ள அதிசய ஆட்டுக்குட்டியை கிருஷ்ணகிரி பகுதி மக்கள் வியப்புடன் கண்டு வருகின்றனர்.

Samayam Tamil 21 Jan 2021, 5:44 pm
கிருஷ்ணகிரி மாவட்டம், எலத்தகிரி பகுதிக்குட்பட்ட புனித சவேரியார் நகரில் வசித்து வருபவர்கள் சார்லஸ் - சபரியம்மாள் தம்பதி. இவர்கள வீட்டில் செம்மறி ஆடு வளர்த்து வருகின்றனர்.
Samayam Tamil அதிசய ஆட்டுக்குட்டி
இரண்டு வாய்களுடன் பிறந்துள்ள அதிசய ஆட்டுக்குட்டி -கிருஷ்ணகிரி


இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கருவுற்றிருந்த செம்மறி ஆடு அண்மையில் குட்டி ஒன்றை ஈன்றது. அந்த குட்டிக்கு 2 வாய், 2 நாக்கு இருப்பதை கண்டு சார்லஸ் வியப்படைந்தார்.

தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிசய ஆட்டு குட்டியை ஆச்சர்யத்துடன் கண்டு செல்கின்றனர்.

Salem Corona:10 வகுப்பு மாணவருக்கு கொரோனா...10 நாட்கள் இழுத்து மூடப்பட்ட அரசுப் பள்ளி!

அதிசயத்தக்க விதத்தில் பிறந்துள்ள ஆட்டுக்குட்டி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தலை, இரண்டு கண்களுடன் ஆட்டு குட்டி பிறப்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால், இரண்டு வாய்களுடன் பிறந்துள்ள ஆட்டு குட்டி கிருஷ்ணகிரி பகுதியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

அடுத்த செய்தி