ஆப்நகரம்

​போர்வெல் பம்பை அகற்றாமல் தார் சாலை; சேலத்தில் வினோதம்- தொடரும் அட்டூழியம்!

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அப்புசாமி தெருவில் ஆழ்துளை கிணற்றின் பம்பை அகற்றாமல் தார் சாலை போட்ட வினோதம் நடந்துள்ளது. இரவோடு இரவாக பம்ப் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போன்ற சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 12 Aug 2022, 12:34 pm

ஹைலைட்ஸ்:

  • பழுதடைந்த சாலையை மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணி
  • போர்வெல் பம்பை அகற்றாமல் அப்படியே சேர்த்து தார் சாலை
  • இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட போர் வெல்லை அகற்றியுள்ளனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil போர்வெல் பம்பை அகற்றாமல் தார் சாலை
போர்வெல் பம்பை அகற்றாமல் தார் சாலை
சேலம் மாநகராட்சி பகுதிகளில் தற்போது சாலைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 28 வது கோட்டத்துக்குட்பட்ட அப்புசாமி தெருவில் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலிருந்த சாலையை மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அவர் என்ன சாராயம் காய்ச்சியா குடிச்சார்? அரசு விக்கிறததான குடிச்சார்- கணவனுக்காக மனைவி போலீசாருடன் வாக்குவாதம்!

இதனடிப்படையில் அனைத்து பகுதிகளும் தார் சாலைகளாக போடப்பட்டது. அப்போது சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து நிலையில் ஆழ்துளை போர்வெல் ஒன்றும் இருந்தது. தார்சலை போட்ட ஒப்பந்ததாரர்கள் இந்த போர்வெல் பம்பையும் அகற்றாமல் அப்படியே போர்வெல்லையும் சேர்த்து தார் சாலையை போட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்களின் இந்த நடவடிக்கை செவ்வாய்பேட்டை வாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இது குறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதை அடுத்து ஒப்பந்ததாரர்கள் இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட போர் வெல்லை அகற்றி அதன் மீது மண்ணைக் கொண்டு மூடி உள்ளனர். ஒப்பந்ததாரரின் இந்த நடவடிக்கை பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் போர் வெல்லை அகற்றாமல் சாலை போட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது சேலத்தில் போர்வெல் மீது போடப்பட்ட தார் சாலை இரவோடு இரவாக அகற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி