ஆப்நகரம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் ஆர்ப்பாட்டம்; தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள்!

சேலம் மாவட்டம் வெள்ளியம்பட்டி கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 12 Apr 2023, 5:17 pm

ஹைலைட்ஸ்:

  • சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

  • அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் ஆர்ப்பாட்டம்

  • விளையாட்டு மைதானம் அமைக்க தடை விதிக்க கோரிக்கை

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட குறிஞ்சி ஊராட்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் வெள்ளாம்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மொத்தம் ஏழு ஊராட்சி மன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு அகராதிபட்டினம்,மாரியம்மன் கோயில் தெரு, சின்னூர், ஜெ ஜெநகர், பழைய காலனி, புது காலனி உள்ளிட்ட பகுதிகள் இருக்கின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டம் குறிஞ்சி ஊராட்சியில் சுமார் 90 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று தலைமுறையாக புறம்போக்கு நிலத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பட்டா வழங்க கோரிக்கை
இவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட குப்பன்னூர் ஊராட்சி வெள்ளியம்பட்டி கிராமத்தில் அப்பகுதி மக்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தில் தற்போது விளையாட்டு மைதானம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் குடிநீர் வசதியை உடனடியாக செய்து தர கோரி சாலை மறியல்; சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து நெரிசல்!

விளையாட்டு மைதானம் அமைக்க தடை
வனவிலங்குகள் வரும் இடத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தால் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்பதனை வலியுறுத்தி விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு போராட்டத்திலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் வழங்கப்பட்டது. ஆனால் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மாவட்ட குறிஞ்சி ஊராட்சியில் உள்ள பொது மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என குப்பனூர் ஊராட்சி வெள்ளியம்பட்டி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் பீகாரில் தான் முதலில் சுவாமி ஜெகநாதன் சரஸ்வதி தலைமையின் கீழ் கடந்த 1929 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு ஏதேனும் குறை இருந்தால் அவர்களை ஒன்று திரட்டி அதற்காக போராடும் இயக்கமாக இவை நிறுவப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி