ஆப்நகரம்

டாக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை... சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாநகராட்சி மருத்துவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Samayam Tamil 16 Apr 2021, 4:15 pm

ஹைலைட்ஸ்:

  • மருத்துவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.
  • மருத்துவர் பார்த்திபன் மீது ஏற்கெனவே வழக்கு.
  • மதுரை மற்றும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இணைந்து சோதனை.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சேலம் டாக்டர் வீட்டில் சோதனை
சேலத்தில் அரசு மருத்துவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலக மருத்துவராக பார்த்திபன் என்பவர் தற்போது பணியாற்றி வருகிறார். கொரானா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் இவர், ஆங்காங்கே கொரானா சிகிச்சை முகாம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு இல்லத்தில் குடியிருக்கும் அவரது வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர். சோதனையில் சிக்கிய ஆவணங்களை கைப்பற்றி அவர்கள் விசாரணையை துவக்கியுள்ளனர்.

மருத்துவர் பார்த்திபன் மதுரையில் பணியாற்றியபோது மருந்து கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக ஏற்கெனவே இவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்காயிரம் லஞ்சத்துக்கு ஆசைப்பட்ட மின்வாரிய ஏஇ சஸ்பெண்ட்?

அதன் தொடர்ச்சியாக இந்த விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மதுரை மற்றும் சேலத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இணைந்து அரசு மருத்துவர் வீட்டில் போவீசார் சோதனை மேற்கொண்டுள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி