ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பது தொடர்பான முக்கியப் பணி தொடங்கியது...

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்காகப் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படவுள்ள நிலையில், வகுப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Samayam Tamil 18 Jan 2021, 11:40 am
தமிழகத்தில் கொரானா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு படிப்படியாக தற்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
Samayam Tamil பள்ளிகள் திறப்பது தொடர்பான முக்கியப் பணி தொடங்கியது...
பள்ளிகள் திறப்பது தொடர்பான முக்கியப் பணி தொடங்கியது...


இதனடிப்படையில் தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளையும் திறக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்ததையடுத்து தமிழகம் முழுவதும் 10 மற்றும்12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, சேலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. மூங்கபாடி
பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளைத் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணிகளில் பள்ளியின் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாஸ்டர் படத்தால் கொரோனா பரவல், அபராதம் வெறும் 5 ஆயிரம்தான்!

ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவ-மாணவிகள் தனி மனித இடைவெளியோடு அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருவதோடு இருக்கைகளும் தூய்மைப் படுத்தப்பட்டுச் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

நாளை முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை முதல் மாணவர்களின் இயல்பான கல்வி வாழ்க்கை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் அரசு அனுமதி அளிக்கும் என மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி