ஆப்நகரம்

ஊரடங்கு கொடுமை: சேலம் டூ சென்னை மதியம் 2 மணிக்கு லாஸ்ட் பஸ்!

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் சென்னை மதுரை நெல்லைக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 Apr 2021, 7:50 pm
சேலம் மாவட்டத்திலிருந்து பிரதான மாவட்டங்களுக்குப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பயணிகள் வருகையைப் பொறுத்து பேருந்துகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ஊரடங்கு கொடுமை: சேலம் டூ சென்னை மதியம் 2 மணிக்கு லாஸ்ட் பஸ்!


சேலம் போக்குவரத்து அதிகாரிகள் மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டனர். தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் ஆவதை முன்னிட்டு சேலத்திலிருந்து முக்கிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் கடைசியாக எப்போது புறப்படும் என்பதைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி சேலத்திலிருந்து சென்னைக்கு மதியம் 2 மணி வரை மட்டுமே பேருந்துகள் புறப்படும். அதேபோல் வேலூருக்கு மாலை 4 மணிவரையிலும் சிதம்பரம் கடலூர், திருவண்ணாமலை, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல மாலை 5 மணி வரையிலும் மதுரைக்குச் செல்ல ஐந்து முப்பது மணி வரையிலும் சேலத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கொரோனா 2ஆம் அலை: சேலத்தில் அதிரடி கட்டுப்பாடு, மக்கள் அதிர்ச்சி!

அத்துடன் விழுப்புரம், கோவை, திருச்சி ஆகிய ஊர்களுக்குச் செல்ல மாலை 6 மணி வரையிலும் திருப்பத்தூர், ஓசூர் ஆகிய பள்ளிக்குச் செல்ல மாலை ஆறு முப்பது மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப்படும்.

இதுதவிர பெங்களூர் மற்றும் திருப்பூர் செல்ல இரவு 7 மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப் படும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி