ஆப்நகரம்

நெற்றியில் நாமம், கையில் திருவோடு... சேலம் ஆட்டோ ஓட்டுநர்கள் நூதன ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 13 Feb 2021, 10:18 am
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து 1 லிட்டர் நூறு ரூபாயை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுனர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

30 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் ஸ்டிரைக்: கோடிக் கணக்கில் நட்டம்!

அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓட்டுநர்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு, கையில் திருவோடு ஏந்தியவாறு ஆட்டோக்களில் கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அடுத்த செய்தி