ஆப்நகரம்

பார்வை விழிப்புணர்வு: கண்களைக் கட்டியபடி மாணவர்கள் பேரணி

பார்வை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணாக்கர்கள் கண்களைக் கட்டிக்கொண்டு பேரணி நடத்தினர்

Samayam Tamil 16 Feb 2021, 12:53 pm
சேலத்தில் பார்வை குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கள் கண்களை கட்டிக்கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர்...
Samayam Tamil கண்ணைக் கட்டி பேரணி


பார்வை குறைபாடு விழிப்புணர்வு மாதம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது இதனையொட்டி பார்வை குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது குறித்த சேவைகள் பற்றி பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் சேலம் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சித்ரா வழக்கில் ஹேமந்த் நிரபராதி ஆவாரா? கசக்கும் உண்மைகள்

இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பார்வை குறைபாட்டினை வலியுறுத்தி தங்களின் கண்களை கட்டிக்கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி ஆனது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியார் மேம்பாலம் வழியாக காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவுற்றது.

அடுத்த செய்தி