ஆப்நகரம்

பூலாம்பட்டி ஏரியில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்

ஞாயிற்றுகிழமை என்பதால் வழக்கத்தை விட பூலாம்பட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.

Samayam Tamil 28 Dec 2020, 5:47 pm
கொரோனாவுக்குப் பிறகு மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்கள் மீண்டும் இயக்கத்துக்கு வந்துள்ளன. அந்த வரிசையில், சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதன் விளைவாகப் படகு சவாரியில் தொடங்கியுள்ளதால், பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil பூலாம்பட்டி ஏரி


சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து பூலாம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை கோனேரிப்பட்டி கதவனைக்கு டெல்டா பாசனத்திற்க்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும்,கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்க்காக வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 400 கன அடியாக குறைத்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் வழக்கத்தை விட பூலாம்பட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. படகுத் துறைக்கு வரும் பயணிகள் குடும்பத்துடன் விசைப்படகில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

அதிமுகவில் மீண்டும் விரிசல்? இரட்டை இலையைக் காட்டி நடக்கும் பேரம்!

பூலாம்பட்டி படகுத்துறை கடல் போல் காட்சி அளித்தது. அதே போன்று பில்லுக்குறிச்சி, மூலப்பாதை, குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய் தண்ணீரில் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

அடுத்த செய்தி