ஆப்நகரம்

போலீஸ் vs வக்கீல் சேலத்தில் அணல் பறக்கும் போட்டி!

பொதுமக்களுக்கும் வழக்கறிஞர் மற்றும் காவல்துறை இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் வேதரத்தினம் துவக்கி வைத்தார்.

Samayam Tamil 8 Aug 2021, 3:09 pm
சேலம் சங்கர் நகரில் அமைந்துள்ள காஸ்மோபாலிட்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாகப் பொதுமக்கள் வழக்கறிஞர் மற்றும் காவல்துறை இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் இறகுப்பந்து போட்டி இன்று நடைபெற்றது.
Samayam Tamil போலீஸ் vs வக்கீல் சேலத்தில் அணல் பறக்கும் போட்டி!


போக்குவரத்து துணை ஆணையாளர் வேதரத்தினம் கலந்துகொண்டு இறகுப்பந்து போட்டியைத் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த இறகுப்பந்து போட்டியில் 20 குழுக்களைக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் பிரிவினருக்குப் பெறுபவர்களுக்குக் கோப்பைகள் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

கடைகளைத் திறக்க கட்டுப்பாடு: அரசு வெளியிட்ட அறிவிப்பு!
இந்தப் போட்டியின் காஸ்மோபாலிட்டன் கிளப்பின் செயலாளர் மாணிக்கவாசகம் தலைவர் கோவிந்தராஜ் பொருளாளர் விசுவநாதன் குழு உறுப்பினர்கள் உமாசங்கர் மற்றும் இறகுப்பந்து பயிற்சியாளர் ராஜவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி