ஆப்நகரம்

ஊரடங்கால் அழுகிய காய்கறிகள்: வியாபாரிகள் கண்ணீர்!

இரவு நேர ஊரடங்கால் சேலத்தில் காய் கறிகளின் வரத்துத் தாமதமாகியுள்ளது. இதனால் விற்பனை குறைவதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.

Samayam Tamil 22 Apr 2021, 11:44 pm
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை நான்கு மணிவரை பேருந்து லாரி கார் போன்ற வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது .
Samayam Tamil ஊரடங்கால் அழுகிய காய்கறிகள்: வியாபாரிகள் கண்ணீர்!


இந்தநிலையில் இரவுநேர பொது ஊரடங்கு காரணமாகச் சேலத்திற்குக் காய்கறிகள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காய்கறி வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், “திருமணிமுத்தாறு ஆற்றோர மார்க்கெட் மற்றும் வாஉசி மார்க்கெட் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை விற்பனை காய்கறி அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மார்க்கெட்டுக்கு பெங்களூர் ஓசூர் ராயக்கோட்டை தலைவாசல் வீராணம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து காய்கறிகள் வருகின்றன.

சேலம் அரசு பேருந்துகளில் கொரோனா அபாயம்: மொத்தம் 20 ஆயிரம் அபராதம்!

நாள்தோறும் நள்ளிரவு ஒரு மணியளவில் மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி 4 மணிக்கு விற்பனைக்குத் தயாராகி விடும். ஆனால் நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு காரணமாக நள்ளிரவு ஒரு மணிக்கு வர வேண்டிய காய்கறிகள் 4 மணிக்கு பிறகுதான் சேலத்துக்கு வருகிறது.

இதனால் வியாபாரம் தொடங்க காலை 6 மணி ஆகிறது. வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. காய்கறிகள் நீண்ட நேரமாக மூட்டைகளில் இருப்பதால் அழுகும் நிலை ஏற்படுகிறது. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளைக் கொண்டு வருவதற்கு எந்தவித தடையும் விதிக்கக்கூடாது” என்கின்றனர்.

அடுத்த செய்தி