ஆப்நகரம்

சேலம் ஆத்தூரில் தினமும் 10 கொரோனா சாவு: அதிகாரிகள் களத்தில் அதிரடி!

ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்து அதிகாரிகள் தூய்மைப்படுத்தினர்.

Samayam Tamil 18 May 2021, 11:35 pm
தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாகத் தினந்தோறும் பாதிப்பு 33 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது.
Samayam Tamil சேலம் ஆத்தூரில் தினமும் 10 கொரோனா சாவு: அதிகாரிகள் களத்தில் அதிரடி!


இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகர பகுதியிலும் 2ஆவது அலை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தினமும் 350க்கும் மேற்பட்டோர் கொரானாவிற்க்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக ஆத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனோ பெரும் தொற்றால் தினமும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

சேலம் சிறுமி ஊரடங்கில் வீட்டிலிருந்தே உலக சாதனை!

இந்நிலையில் கொரோனோ தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் ஏற்பாட்டில் ஆத்தூர் தீயணைப்பு வாகனம் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதி, நீதிமன்ற வளாகம், அம்மா உணவகம், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளித்துச் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த செய்தி