ஆப்நகரம்

இந்த நேரத்தில் உயிரை வெறுத்து சேலத்தில் விவசாயிகள் போராட்டம்!

உரம் விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Samayam Tamil 22 Apr 2021, 7:07 pm
இந்தியா முழுவதும் உர விலையை 58 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கண்டன போராட்டங்களையும் செய்து வருகின்றனர்.
Samayam Tamil இந்த நேரத்தில் உயிரை வெறுத்து சேலத்தில் விவசாயிகள் போராட்டம்!


இதன் அடிப்படையில் சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செல்வராஜ் பேசியதாவது, “ஏற்கனவே மத்திய அரசின் 3 பேரும் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் அரசு பேருந்துகளில் கொரோனா அபாயம்: மொத்தம் 20 ஆயிரம் அபராதம்!

இந்நிலையில் தற்போது மத்திய அரசு விலையை 58 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் மூட்டைக்கு 700 ரூபாய் வரை அதிகரித்திருப்பது கண்டனத்திற்குரியது. உடனடியாக விலை உயர்வை திரும்பப்பெறவேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் தீவிரப்படுத்தப்படும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயச் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி