ஆப்நகரம்

சேலம் அரசு பேருந்துகளில் கொரோனா அபாயம்: மொத்தம் 20 ஆயிரம் அபராதம்!

கொரோனோ நோய்த்தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது சேலம் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Samayam Tamil 22 Apr 2021, 1:39 pm
தமிழகத்தில் கொரோனோ இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதையடுத்து அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 20ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil சேலம் அரசு பேருந்துகளில் கொரோனா அபாயம்: மொத்தம் 20 ஆயிரம் அபராதம்!


அதேபோல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளைக் கொண்டு அமர்ந்து செல்லும் வகையில் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டும் உள்ளார்களா எனச் சேலம் அம்மாபேட்டை பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கடைசில கபசுரம் கொடுத்துதா கொரோனாவ விரட்டுராங்க: சேலத்தில் ஸ்பெஷல் கேம்ப்!

சோதனையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்ததுடன் அதிக பயணிகளை ஏற்றி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 500 ரூபாய் முதல் 5ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.

மொத்தம் இன்று நடத்தப்பட்ட சோதனையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளிடமிருந்து அபராதமாக விதிக்கப்பட்ட சேர்ந்த 20 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி