ஆப்நகரம்

திமுக பிரமுகர் குடித்துவிட்டு சேலம் சமூக ஆர்வலருக்குக் கொலை மிரட்டல்!

திமுக, கட்சியின் தேர்தல் விமர்சனங்கள் குறித்து வாட்ஸ் ஆப்பில் வந்த தகவலுக்குக் கருத்து தெரிவித்த நபரின் வீட்டிற்குச் சென்று வீரகனூர் திமுக நகரச் செயலாளர் மிரட்டல் விடுக்கும் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.

Samayam Tamil 18 Apr 2021, 4:27 pm
திமுக நகரச் செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் குடிபோதையில் மிரட்டல், விடுக்கும் வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐஜூ அலுவலத்திலிருந்து பேசுவதாக செல்போனில் மிரட்டல் விடுத்தது ஆதாரத்துடன் பதிவாகியுள்ளது.
Samayam Tamil திமுக பிரமுகர் குடித்துவிட்டு சேலம் சமூக ஆர்வலருக்குக் கொலை மிரட்டல்!


சேலம் மாவட்டம் வீரகனூரை சேர்ந்த சமூக ஆர்வலர் மகாராஜ மணிகடன். வயது 30. இவர் பொது மக்களுக்குச் சட்ட ரீதியாகப் போராடுவது, அடிப்படை பிரச்சினைகளுக்கு மனு எழுதிக் கொடுத்து அவற்றைத் தீர்த்து வைப்பது போன்ற பணிகளைச் செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் மகாராஜ மணிகண்டன் சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் தேர்தலில் திமுக நிலை குறித்து வந்த விமர்சனத்திற்குக் கருத்து தெரிவித்துள்ளார். இதையறிந்த வீரகனூர் திமுக நகரச் செயலாளர் அழகுவேல், தனது ஆதரவாளர்களுடன் குடிபோதையில் நேற்று இரவு மகாராஜ மணிகண்டன் வீட்டிற்குச் சென்ற கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

எடப்பாடி அருகே சமூக இடைவெளி விதிமீறல்; கொரோனா தொற்று பரவும் அபாயம்

இதற்கிடையே மகாராஜ மணிகண்டனின் செல்போனிற்கு தொடர்பு கொண்ட அழகுவேல் தான் ஐஜீ அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டல்கள் தொடர்பான ஆடியோ, வீடியோ இப்போது வெளியாகியுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது.

சம்பவம் குறித்து மணிகண்டன் வீரகனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குடிபோதையிலிருந்த திமுகவினரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது எந்தவிதமான வழக்கும் பதியப்படவில்லை.

அடுத்த செய்தி