ஆப்நகரம்

Dmk Salem: சசிகலா ரிலீசானதும் எடப்பாடியின் ஆட்டம் க்ளோஸ்... முதல்வர் தொகுதியில் ஸ்டாலின் 'தில்' பேச்சு!

எடப்பாடி ஆட்சிக்கு வருகின்ற 27ஆம் தேதி சசிகலா முடிவு கட்டுவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பேசியுள்ளார்.

Samayam Tamil 18 Jan 2021, 8:08 pm
சேலம் மாவட்டம். எடப்பாடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட குருமம்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பெண்களின் குறைகளை கேட்டறிந்தார்.
Samayam Tamil திமுக  கிராம சபை கூட்டம் -  சேலம்
சேலம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கிராம சபை கூட்டத்தில் பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


அதனை தொடர்ந்து கூட்டத்தினர் மத்தியில் ஸ்டாலின் பேசியது:

இங்கே பேசிய பெண்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இவற்றில் பல பணிகள் உள்ளாட்சி துறை மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஊழல்மணியாக திகழ்கிறார்.

தீவட்டிப்பட்டியை திணறடித்த திமுக: ஸ்டாலினுக்கு வேற லெவல் வரவேற்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டி பேசினால் இந்த தொகுதி எம்எல்ஏவான முதல்வருக்கு ரொம்ப கோபம் வருகிறது. இதனால் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்.

. துரோகம் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி தான் உதாரணம், வரும் 27 ஆம் தேதி சசிகலா வெளியே வர போகிறார். அவர் வெளியே வந்தவுடன் இவர் ஆட்டம் முடிந்து விடும். சசிகலாவால் முதல்வரான இவர் அவருக்கே துரோகம் செய்தார்.

அம்மா ஆட்சி என்று பேசி கொள்ளும் இவர்கள், அவரின் மரணம் குறித்து இதுவரை எந்த உண்மையையும் வெளியே கொண்டு வரவில்லை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து ஆணையம் அமைத்தனர். விசாரணை ஆணையம் அமைத்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இதற்கு விடை கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் பேசினார்.

13 கிலோமீட்டர் தொடர் ஓட்டம்... சேலம் சிறுமி சாதனை!

இந்தக் கூட்டத்தில், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டிஎம் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், திமுக மாவட்ட கழக பொறுப்பாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் என ஏராளாமானோர் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி