ஆப்நகரம்

பள்ளிவாசல்களைத் தேர்வு செய்து சேலம் திமுக உதவிக்கரம்!

ரமலான் திருநாளையொட்டி, சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சுமார் நூறு பள்ளி வாசலுக்கு தேவையான அரிசி, சர்க்கரை மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவற்றைச் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்ஆர் பார்த்திபன் வழங்கினார்.

Samayam Tamil 28 Apr 2021, 10:41 pm
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் திருநாளையொட்டி சேலம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில், தொகுதிக்கு உட்பட்ட நூறு பள்ளி வாசலைத் தேர்வு செய்து, சுமார் நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Samayam Tamil பள்ளிவாசல்களைத் தேர்வு செய்து சேலம் திமுக உதவிக்கரம்!


நோம்பு காலத்தில் பள்ளி வாசலுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஜாமியா மஜீத் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்ஆர் பார்த்திபன், தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள நூறு பள்ளி வாசல்களைத் தேர்வு செய்து தலா ஐம்பது கிலோ அரிசி, இருபது கிலோ சர்க்கரை மற்றும் ஐந்து கிலோ பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

வாக்கு எண்ணிக்கையில் சரியான ட்விஸ்ட்... கடைசி நேர உத்தரவால் பரபரப்பு!

தொடர்ந்து இது போன்ற உதவிகள் செய்து தர உள்ளதாக ஆர்எஸ் பார்த்திபன் தெரிவித்தார். நிகழ்ச்சியில், பனமரத்துபட்டி ஒன்றிய துணை செயலாளர் ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அடுத்த செய்தி