ஆப்நகரம்

234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட எடப்பாடியிலிருந்து அழுத்தம்... என்ன செய்யும் தேமுதிக?

தேசிய முற்போக்கு திராவிட கழகம் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் விருப்பம் தெரிவித்து மேலிடத்துக்கு வலியுறுத்தியுள்ளனர்.

Samayam Tamil 2 Mar 2021, 9:48 am
தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு அதன் தோழமைக் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் நீடிக்கிறது.
Samayam Tamil Premalatha-Vijayakanth


இப்படியாக பேச்சுவார்த்தை இனும் நடைபெற்று முடிவு பெறாத நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொறுப்பாளர்கள் தனித்துப் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி பஸ்நிலையத்தில் மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் மாரிமுத்து மாவட்ட கழக செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். அதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அதனை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் விஷயத்தில் என்னை பயமுறுத்தப் பார்த்தாங்க: அமலா பால் திடுக் தகவல்

அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட கழக பொறுப்பாளர் ரமேஷ் அரவிந்த், எடப்பாடி நகரச் செயலாளர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் மெய்வேல், மாவட்ட கழக துணைச் செயலாளர் அமுதா, சங்ககிரி தொகுதி பொறுப்பாளர் தங்கமணி, மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தனித்துப் போட்டியிடுவது என்பதை இவ்வளவு உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள் என்றால், இதில் எவ்வளவு பெரிய மகிழ்ச்சியை உணர்கிறார்கள் என்பதும், இதற்குப் பின்னே இருக்கும் அரசியல் நகர்வை கவனிக்க வேண்டியது அவசியம் என்பதும் தோழமைக் கட்சிகளுக்குப் புரிய வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி