ஆப்நகரம்

கொரோனா பீதியின் உச்சம்: வெறிச்சோடிய சேலம் பேருந்துகள்!

கொரானா தொற்று காரணமாகப் பேருந்துகளில் பயணம் செய்யப் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கூட்டம் குறைவாக வருவதால் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 21 Apr 2021, 10:24 pm
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2ஆம் அலை பரவல் தீவிரமெடுத்துள்ளது. இதையடுத்து தொற்றைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வெளியில் தேவையின்றி சுற்றுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil கொரோனா பீதியின் உச்சம்: வெறிச்சோடிய சேலம் பேருந்துகள்!


இதனையடுத்து மாவட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஆங்காங்கே சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு நேற்று எச்சரிக்கை விடப்பட்டது.

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் கொரோனா காரணமாகப் பொதுமக்கள் பலர் பேருந்துகளில் பயணிக்க அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பேருந்துகளில் பயணிகளே இல்லாத நிலை ஏற்படுகிறது.

ஊரடங்கு கொடுமை: சேலம் டூ சென்னை மதியம் 2 மணிக்கு லாஸ்ட் பஸ்!

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பகல் நேரங்களில் சென்னை பெங்களூர், கோவை, திருச்சி, மதுரை, திருப்பத்தூர், ஈரோடு, சிதம்பரம், வேலூர் உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், “சேலத்திலிருந்து கோவை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல புதிய பேருந்து நிலையத்திலிருந்து எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். தற்போது கொரோனா இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகப் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. நோய்த் தொற்று அச்சம் மக்கள் மத்தியில் உள்ளதை உணர முடிகிறது” என்றார்.

அடுத்த செய்தி