ஆப்நகரம்

முதல்வர் தொகுதியில் தேர்தல் முறைகேடு: வட்டாச்சாயிர் கட்சிகளுக்கு வேண்டுகோள்!

எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 12டி விண்ணப்பப் படிவம் வழங்குவதில் குளறுபடி நடந்துள்ளதாக திமுக தரப்பினர் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 9 Mar 2021, 12:48 pm
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி தனலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
Samayam Tamil முதல்வர் தொகுதியில் தேர்தல் முறைகேடு: வட்டாச்சாயிர் கட்சிகளுக்கு வேண்டுகோள்!


இக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது எடப்பாடி நகர திமுக செயலாளர் பாஷா மற்றும் கொங்கணாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் பரமசிவம் ஆகியோர், “80 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தேர்தல் ஆணையம் வழங்கும் தபால் ஓட்டு காண 12டி விண்ணப்பப் படிவம் வழங்குவதில் அதிமுகவினர் குளறுபடி செய்துள்ளனர்” எனக் குற்றம் சாட்டினர்.

அதற்கு அதிமுக நகரச் செயலாளர் முருகன் கண்டனம் தெரிவித்ததையடுத்து திமுகவினர் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வேளாண் அதிகாரி திமுகவுக்காக ஏற்காட்டில் போட்டி: பணி நீக்க உத்தரவு போட்டாச்சு!

அப்போது தேர்தல் அதிகாரி தனலிங்கம் இருவரையும் சமாதானம் செய்து இனி எந்த குழப்பமும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் தேர்தல் நியாயமான முறையில் நடத்துவதற்கு அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அடுத்த செய்தி