ஆப்நகரம்

எலும்பு முறிவு சிகிச்சையில் கலக்கும் அரசு மருத்துவமனை

கொரோனா காலத்திலும் 145 மூட்டு அறுவை சிகிச்சைகள்

Samayam Tamil 17 Nov 2020, 1:34 pm
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில், கொரோனாப் பேரிடர்க்கால நெருக்கடிகளுக்கு இடையிலும் சுமார் 145 பேருக்கு எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
Samayam Tamil எடப்பாடி மருத்துவமனை


சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி மக்களின் தேவைக்கேற்ப எடப்பாடி அரசு மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன கருவிகளைக் கொண்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த இந்த ஊரடங்கு காலங்களில் மார்ச் மாதம் முதல் இன்று வரை 145 எலும்பு மூட்டு அறுவை சிகிச்சையும் இரண்டு வருடங்களில் மொத்தம் 400 க்கும் மேற்பட்ட எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை செய்ப்பட்டுள்ளதாகவும் தற்போது முழு மூட்டு மாற்று இடுப்பு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக மருத்துவர் பாலாஜு, மற்றும் தலைமை மருத்துவர் சரவணக்குமார் தெரிவித்தனர்.

உங்க பெயர் லிஸ்ட்ல இருக்கா..? உடனே செக் பண்ணுங்க!

அப்போது அரசு மருத்துவர்கள் இமாம்,செந்தில் இருசப்பன், ஜெயக்குமார் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்

அடுத்த செய்தி