ஆப்நகரம்

எடப்பாடி ஊரில் நடந்த மாரியம்மன் எருது திருவிழா..!

எடப்பாடி தாதாபுரத்தில் மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு எருதாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

Samayam Tamil 5 Mar 2021, 8:25 pm
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சியில் மாரியம்மன் கோயில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
Samayam Tamil எடப்பாடி ஊரில் நடந்த மாரியம்மன் எருது திருவிழா..!


தாதாபுரம், மணக்காடு, காட்டுவளவு, மணியகாரம்பாளையம் ஆகிய நான்கு கரை ஊர் கவுண்டர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த எருதாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட எருதுகளும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியினை தாதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பார்த்து ரசித்துச் சென்றனர்.

இந்த விழாவையொட்டி பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை எடப்பாடி போலீசார் சிறப்பாகச் செய்திருந்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலிலிருக்கும் நிலையில் அதிகாரிகள் கண்காணிப்பிற்கு நடுவே போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி