ஆப்நகரம்

முத்துமலை முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்; குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த எடப்பாடியார்!

முத்து மலை முருகன் திருக்கோயிலில் நடைபெற்ற வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 14 May 2022, 10:44 am
சேலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற முத்து மலை முருகன் திருக்கோயிலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.
Samayam Tamil குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த எடப்பாடியார்


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தினந்தோறும் கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜை, ஆராதனை மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதன்படி நேற்று நடைபெற்ற வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

எடப்பாடியை அப்செட் ஆக்கிய மாஜிக்கள்; சேலத்தில் ஷாக்கான ர.ர.,க்கள்!

இந்த நிகழ்வில் அமைப்பு செயலாளர் செம்மலை, முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புறம் மாவட்ட கழக செயலாளருமான சிவி.சண்முகம், சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி, கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் குமரகுரு, சட்டமன்ற உறுப்பினர்கள் சித்ரா, ராஜமுத்து, ஜெய்சங்கரன், நல்லதம்பி மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டு ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி