ஆப்நகரம்

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைவு... எடப்பாடி உரை

ஓமலூர் ஒன்றிய திமுக நகர செயலாளர் அறிவழகன், அமமுக மாவட்ட விவசாய அணி செயலாளர் பிரபுகுமார், அமமுக மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரபு, பாமக மாநில மாணவரணி துணை செயலாளர் கௌசிக்ராஜ் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

Samayam Tamil 19 Nov 2020, 9:14 pm
சேலத்தில் அமமுக, திமுக, காங்கிரஸ், பாமக கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
Samayam Tamil edappadi


சேலம் மாவட்டம் ஓமலூர், மேட்டூர், மேச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், எடப்பாடி ஆகிய பகுதியை சொந்த திமுக, அமமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

ஓமலூர் ஒன்றிய திமுக நகர செயலாளர் அறிவழகன், அமமுக மாவட்ட விவசாய அணி செயலாளர் பிரபுகுமார், அமமுக மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரபு, பாமக மாநில மாணவரணி துணை செயலாளர் கௌசிக்ராஜ் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

உங்க பெயர் லிஸ்ட்ல இருக்கா..? உடனே செக் பண்ணுங்க!

புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுகவின் துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

அடுத்த செய்தி