ஆப்நகரம்

பழனிசாமியைச் சந்தித்த வளர்மதி... அதிமுகவின் அடுத்த திட்டம் என்ன?

அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை எதிர்க்கட்சி தலைவரைத் தேர்வு செய்வதுதான் என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி சேலத்தில் வைத்து நிருபர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 4 May 2021, 4:56 pm
அரசியலில் வெற்றி தோல்வி மாறி மாறி வருவது சகஜம்தான் எனக் கருத்து தெரிவித்துள்ள வளர்மதி அதிமுகவின் அடுத்தகட்ட பணி என்ன என்பது குறித்து நிருபர்களுக்குப் பேட்டியாக அளித்துள்ளார்.
Samayam Tamil பழனிசாமியைச் சந்தித்த வளர்மதி... அதிமுகவின் அடுத்த திட்டம் என்ன?


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுற்ற நிலையில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. தற்போது அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது.

இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியைச் சேலம் நெடுஞ்சாலை நகர்ப் பகுதியில் உள்ள அவருடைய இல்லத்தில் கட்சியின் மூத்தத் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியைக் கூட்டாகச் சந்தித்தனர்.

ராஜினாமா செய்த முதல்வர், அதிமுக முக்கியப் புள்ளிகளுக்குத் தரிசனம் தந்தார்!

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு வளர்மதி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். எதிர்க்கட்சி தலைவரைக் கட்சி ஆலோசித்து முடிவு செய்யும். அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை எதிர்க்கட்சி தலைவரைத் தேர்வு செய்வதுதான்.

அரசியிலில் வெற்றி தோல்வி மாறி மாறி வருவது சகஜம்தான். 1972ஆம் ஆண்டிலிருந்து வெற்றி தோல்விகளைச் சந்தித்துப் பழக்கப்பட்டவர்களே அதிமுகவினர். கழக இணை ஒருங்கிணைப்பாளரின் ஆளுமையை நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமைந்தது.

அவருடைய அயராது உழைப்புதான் வெற்றிக்குக் காரணம். புதியதாக அமையவுள்ள அரசின் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்த்துத்தான் கருத்துச் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி