ஆப்நகரம்

போலி வனத் துறை அதிகாரி வேடம்...கோவில் வாட்ச்மேன் செஞ்சிட்டு இருந்த வேலைய பாருங்க!

வட சென்னிமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், காதலர்களை மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போலி வனத் துறையினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 22 Jan 2021, 7:04 pm
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள வட சென்னிமலை உச்சியில் பழமையாக முருகன் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலுக்கு ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
Samayam Tamil போலி வன அதிகாரிகள் கைது
சேலம் வடசென்னிமலைப் பகுதியில் போலி வன அதிகாரிகளாக வலம் வந்த இருவர் கைது


கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் காதலர்கள் சிலர் கோவிலுக்கு சென்று வரும் வனப்பகுதியில் உள்ள மறைவான பகுதிகளில் அமர்ந்து பேசி பொழுதை கழித்து விட்டு செல்வார்கள்.

இதுபோல் மறைவாக பேசிக் கொண்டிருக்கும் காதலர்களை நோட்டமிட்டு சில மர்ம நபர்கள் தாங்கள் வனத்துறை அதிகாரிகள் எனக் கூறி அவர்களை மிரட்டி செல்போன், பணம், நகைகளை வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்துள்ளது.

பள்ளிக்கு வந்த ஆசிரியைக்கும் கொரோனா... பயத்தில் பெற்றோர்கள்

இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு சென்ற ஒரு காதல் ஜோடி சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் படிக்கட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த இரண்டு பேர் தாங்கள் வனத்துறை அதிகாரிகள் எனக்கூறி காதலர்களிடமிருந்து செல்போன், தங்கத்தோடு, வெள்ளி கால் கொலுசு, பணம் உள்ளிட்டவைகளை பறித்து கொண்ட அந்த நபர்கள், அவற்றை கோவிலின் மலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வந்து பெற்று கொள்ளுங்கள் என கூறி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து காதலர்கள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோவில் மலைப் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் தங்கம் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளை!

இதில் ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர் வினோத், கோவில் வாட்ச்மேன் சிவசங்கரன், மலைப் பகுதியில் பேப்பர், பாட்டில்கள் பொறுக்கும் சின்னசாமி ஆகிய மூன்று பேரும்ததான் இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது

. இதனையடுத்து வினோத், சின்னசாமி ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

அடுத்த செய்தி