ஆப்நகரம்

காவிரியில் நீர் குறைந்தது: அணையில் உள்ள தண்ணீர் நம்பிக்கை தருகிறது!

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. எனினும் அணையில் உள்ள நீரின் அளவு விவசாயிகளை நிம்மதியாக வைத்துள்ளது.

Samayam Tamil 23 Nov 2020, 8:49 am
கர்நாடக மாநிலத்தில் பதிவாகும் மழையின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் வரத்து அமைந்துள்ளது. அதன்படி இப்போது காவிரி நதியை ஒட்டியுள்ளப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளது.
Samayam Tamil காவிரியில் நீர் குறைந்தது: அணையில் உள்ள தண்ணீர் நம்பிக்கை தருகிறது!
காவிரியில் நீர் குறைந்தது: அணையில் உள்ள தண்ணீர் நம்பிக்கை தருகிறது!


இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, விநாடிக்கு 7 ஆயிரத்து 464 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதுவே நேற்றைய நிலவரப்படி நீர் வரத்து 9 ஆயிரத்து 478 ஆக இருந்தது.

அணையின் நீர்மட்டம் 98. 20 அடியாக உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் நீர் இருப்பு 62. 53 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரும் அதேவேளைப் பாசனத்திற்காக நீர் தொடர்ந்து திறந்து விடப் படுகிறது.

படகு சவாரியைத் தடுக்கும் ஆகாயத் தாமரைகள்... எப்போது மீளும் ஏற்காடு ஏரி?

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி